follow the truth

follow the truth

August, 18, 2025
HomeTOP1ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மோசடி குறித்து CIDயில் முறைப்பாடு

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மோசடி குறித்து CIDயில் முறைப்பாடு

Published on

நீண்ட தூர சேவையில் ஈடுபடும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணச்சீட்டை கொள்வனவு மோசடி குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சில குழுக்கள் ரயில் ஆசன முன்பதிவு பயணச்சீட்டுகளை இணையத்தளத்தில் கொள்வனவு செய்து பின்னர் அதிக விலைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்கின்றமை குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர், டொக்டர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடியுடன் தொடர்புடைய சகலரையும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பதிவு செய்யப்பட்ட ஆசனப் பயணச் சீட்டுகள் தொடர்பான சோதனைகளை கடுமையாக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர், டொக்டர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...