follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

Published on

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் கறி மிளகாய், பச்சை மிளகாய், போஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதோடு, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வழமையை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை, மிளகாய் ரூ. 900 முதல் ரூ.1000 ஆகவும், பச்சை மிளகாய் ரூ. 1000 முதல் ரூ. 1200 ஆகவும், மொச்சை ரூ. 800 முதல் ரூ. 900 ஆகவும், மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் மரக்கறிகளின் விலை மிகவும் அதிகரித்து வருவதாகவும், மரக்கறிபயிர்கள் அழிந்து வருவதால் மற்ற ஆண்டுகளை விட மரக்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் பெய்த மழை காரணமாக நத்தார் பண்டிகை நெருங்கும் போது இந்த மரக்கறிகளின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...