follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2காலி துறைமுக கடல் மீட்புப் திட்டத்திற்கு அரசு எதிர்ப்பு

காலி துறைமுக கடல் மீட்புப் திட்டத்திற்கு அரசு எதிர்ப்பு

Published on

உத்தேச காலி துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கடல் மீட்புத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்றும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

காலி மீன்பிடி துறைமுகத்தை அவதானித்த பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;

“கடந்த அரசாங்கத்தின் போது இந்த மாகாணத்தின் முன்னாள் அமைச்சர்களினால் காலி துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை. இது நாம் உருவாக்கியது அல்ல. காலி துறைமுகத்திலிருந்து ரூமஸ்ஸல வரையிலான உணர்திறன் வாய்ந்த பகுதியை மீட்பதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பைத்தியம். தலைவலி மாதிரி இருக்கு.

இந்தத் திட்டத்துக்கு எங்கிருந்தோ பணம் வந்திருக்க வேண்டும். இந்த திட்டம் வரும்போது திட்டமிட்டு பணம் செலவழிக்கப்பட்டிருக்கும். ஹோட்டல்களில் செய்யப்படும் இத்தகைய திட்டங்களை நமது அரசு தூக்கி எறிகிறது.

துறைமுக நகர அபிவிருத்தித் திட்டங்களினால் ஏற்படும் அழிவுகளை நாம் அறிவோம்” என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட காலி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கடல் மீளமைத்தல் தொடர்பான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான துணைப் பொது ஆலோசனையை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...