follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு 07 இலட்சம் ரூபா அபராதம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு 07 இலட்சம் ரூபா அபராதம்

Published on

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த ஆறு வர்த்தகர்களுக்கு ஏழு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்ததாகவும், குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார்.

கடந்த 10ஆம் திகதி முதல் நேற்று (16) வரை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 342 வர்த்தகர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக்வும் இவர்களுக்கு எதிராக அந்தந்த நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...