follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு 07 இலட்சம் ரூபா அபராதம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு 07 இலட்சம் ரூபா அபராதம்

Published on

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த ஆறு வர்த்தகர்களுக்கு ஏழு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்ததாகவும், குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார்.

கடந்த 10ஆம் திகதி முதல் நேற்று (16) வரை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 342 வர்த்தகர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக்வும் இவர்களுக்கு எதிராக அந்தந்த நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...