follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1பெரிய அளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள்

பெரிய அளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள்

Published on

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி WhatsApp இணைப்புகளை உருவாக்கி இஸ்ரேலில் வேலை வழங்குவதாக கூறி இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி இந்த நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக இதுவரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்படி, இவ்வாறான மோசடியாளர்களிடம் வீழ்ந்து விடவேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பணியகத்தின் குறுகிய தொலைபேசி இலக்கமான 1989 அல்லது 071 759 35 93 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...