அகமதாபாத் – லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை அறிவித்த நிலையில் அந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் AI-143 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானத்தின் சேவை இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானம் புறப்படுவதற்கு முன்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய விமான ஆய்வின்போது தொழில்நுட்ப கோளாறு ஒன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது