follow the truth

follow the truth

July, 9, 2025
Homeவிளையாட்டுடேய் தகப்பா என்னடா இதெல்லாம்.. தந்தை பேட்டி குறித்து அஸ்வினின் வைரல் பதிவு

டேய் தகப்பா என்னடா இதெல்லாம்.. தந்தை பேட்டி குறித்து அஸ்வினின் வைரல் பதிவு

Published on

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது சக வீரர்கள் உள்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓய்வினை அறிவித்த அஷ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். அஷ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய டெஸ்ட் அணியின் முதல்தர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் திடீரென ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.

திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம். அவமானப்பட்டதால் தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது ஓய்வை அறிவித்திருக்கலாம். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் தலையிட முடியாது என அஷ்வின் தந்தை ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் என் அப்பா கூறியதை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கவில்லை என அஷ்வின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்;

ஊடகம் முன்னிலையில் எப்படி பேசுவது என்று அவருக்கு தெரியாது. டேய் டாடி என்னடா இதெல்லாம். எனது தந்தை கூறியதை பெரிதுபடுத்தாதீர்கள். எனது ஓய்வு குறித்து என் தந்தை கூறிய கருத்துக்களை ஏற்க வேண்டாம். அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பங்களாதேஷூக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் தற்சமயம் இடம்பெறுகிறது. போட்டியில் நாணய...

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் குசல் மெண்டிஸ் சதம்

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தமது ஆறாவது சதத்தைப் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு...