follow the truth

follow the truth

January, 21, 2025
Homeஉலகம்2011க்கு பிறகு மிக மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா - விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கை

2011க்கு பிறகு மிக மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா – விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கை

Published on

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா, கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிசிசிப்பி மற்றும் புளோரிடா போன்ற கடுமையான குளிரை இதுவரை எதிர்கொள்ளாத அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட, வானிலை மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் பகுதியைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல பனிப்புயல்கள் வடகிழக்கு அமெரிக்காவைத் தாக்கின, இதனால் நியூயார்க் நகரம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காரை செலுத்தி 35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர்...

துருக்கி ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து – 66 பேர் பலி

துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், 51 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச...

அமெரிக்காவில் ஆண் – பெண் பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் – டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல்...