follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்ஹசினாவுக்கு எதிராக மீண்டும் பிடியாணை

ஹசினாவுக்கு எதிராக மீண்டும் பிடியாணை

Published on

நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக பங்களாதேஷ் நீதிமன்றம், இரண்டாவது பிடியாணையை பிறப்பித்துள்ளது.

பலர் காணாமல்போன விவகாரத்தில் ஹசினாவுக்கும் தொடர்புள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹசினாவின் 15 ஆண்டு கால ஆட்சியின்போது பேரளவில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள் முன்னெடுத்த புரட்சியால் ஆட்சியை இழந்த 77 வயது ஹசினா கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் தப்பியோடினார். மனித நேயத்திற்கு எதிராகக் குற்றமிழைத்ததாகக் கூறி அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதன் அடிப்படையில் அவரைக் கைதுசெய்ய ஏற்கனவே ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...