follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்அமெரிக்காவின் தடையை எதிர்த்து கடைசியாக உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகும் டிக் டாக்

அமெரிக்காவின் தடையை எதிர்த்து கடைசியாக உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகும் டிக் டாக்

Published on

டிக் டாக் நிறுவனமானது இன்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது அமெரிக்காவின் டிக் டாக் மீதான தடையை முறியடிப்பதற்கான கடைசி முயற்சியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்கர்களின் பேச்சு சுதந்திரத்தின் வரம்பு பற்றிய சோதனை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு, நீதிமன்றம் பிரபல சமூக ஊடக தளத்தை அதன் சீன உரிமையாளரிடமிருந்து பிரிக்க அல்லது ஜனவரி 19 க்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிட்டது.

அதை எதிர்த்து டிக் டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.

அமெரிக்காவின் உளவு மற்றும் அரசியல் கையாளுதலுக்கான கருவியாக டிக்டாக் சமூக ஊடக தளத்தை சீனா பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்க அரசாங்கம் வாதிட்டுள்ளது.

ஆனால் டிக் டாக் இந்த கூற்றை மறுத்துள்ளது, அமெரிக்கா தனது நிறுவனத்தை நியாயமற்ற முறையில் குறிவைத்துள்ளது என்று கூறியுள்ளது.

எவ்வாறாயினும், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூட, இந்த நீதிமன்ற வழக்கு தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று முன்பு கூறியிருந்தார்.

இன்று, அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிக் டாக் இன் அமெரிக்க இருப்பு குறித்து தீர்ப்பளிக்கும், மேலும் இந்த நடவடிக்கை அதன் 170 மில்லியன் அமெரிக்க பயனர்களின் சுதந்திரமான பேச்சு உரிமையை மீறும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும்...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...