தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த 2 சந்தேகநபர்களும் தலைமறைவாகியுள்ளதாக நம்பப்படும் இடங்கள் தொடர்பில் சோதனை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சந்தேகநபர்களை கண்டறியமுடியவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.