follow the truth

follow the truth

January, 18, 2025
HomeTOP1"இரத்தினக்கல் தொழிற்துறையில் தாய்லாந்தை முந்திச்செல்ல வேண்டும்"

“இரத்தினக்கல் தொழிற்துறையில் தாய்லாந்தை முந்திச்செல்ல வேண்டும்”

Published on

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள வற் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகள் நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பேருவளை சீனங்கோட்டை மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக சங்கம் (CGJTA) வருடாந்தம் ஏற்பாடு செய்யும் ஜெம் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சியைப் பார்வையிட்டதன் பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

”இந்தத் தொழிலின் நிகர இலாபத்திற்கு வரி விதிக்கப்படக் கூடாது. எமது நாட்டில் இந்தத் துறையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக இத்தொழிற் துறையை முன்னேற்றுவதற்குச் சாதகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, திறமையான கைவினைஞர்களை உருவாக்கி, ஏற்றுமதித் தொழிலாக இதனை மேலும் முன்னேற்றுவதற்கு அதிகபட்ச சலுகைகளை வழங்க வேண்டும்.

எனவே, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலுக்கு நேர்மறையான குறுகிய கால வேலைத்திட்டமொன்றை வகுத்து அதனைச் செயல்படுத்தி, இத்தொழிலை மேம்படுத்த வேண்டும்.

ஹொங்கொங் மற்றும் தாய்லாந்தை முந்திச் செல்லும் வகையில் எமது நாட்டின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை உருவாக்க வேண்டும்”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு...

ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு

நேற்றைய தினம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் பிரதமர் மற்றும் கல்வி, உயர்...

மின்சாரக் கட்டணமானது 20% இனால் குறைப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை...