follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP1கெலிஓயாவில் கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் கண்டுபிடிப்பு

கெலிஓயாவில் கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் கண்டுபிடிப்பு

Published on

கம்பளை ,கெலிஓயா பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட இந்த மாணவி அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மாணவி வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுஜீவ தாக்கல் செய்த மனு செப்டம்பர் 10 விசாரணைக்கு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க...

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

புற்றுநோயால் வருடாந்தம் சுமார் 250 சிறுவர்கள் உயிரிழப்பு

புற்றுநோயால் வருடாந்தம் 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர்,  நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய்...