follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்அமெரிக்கா காட்டுத்தீ - ஜப்பான் 2 மில்லியன் டொலர் நிதி உதவி

அமெரிக்கா காட்டுத்தீ – ஜப்பான் 2 மில்லியன் டொலர் நிதி உதவி

Published on

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் குறைந்தபட்சம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தில் ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீயையும் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான காட்டுத்தீக்குப் பிறகு, எரிந்த இடிபாடுகளில் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காட்டுத்தீயிலிருந்து மீள்வதற்கு உதவுவதற்காக கலிபோர்னியாவிற்கு 2 மில்லியன் டாலர் உதவி வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கையாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்த உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...