follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP2மருந்துகளைத் தட்டுப்பாடின்றி வழங்க உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை - நளிந்த ஜயதிஸ்ஸ

மருந்துகளைத் தட்டுப்பாடின்றி வழங்க உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை – நளிந்த ஜயதிஸ்ஸ

Published on

எதிர்வரும் இரண்டு வாரங்களில் தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்குவதற்கு, உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பல்வேறு காரணிகளால் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளைத் தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து வழங்குநர் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய பிரச்சினை, விநியோக வலையமைப்பின் சீர்குலைவு போன்ற காரணங்களால் அரசாங்க வைத்தியசாலை அமைப்புகளில் தொடர்ந்தும் மருந்து விநியோகம் செய்ய முடியாமல் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், மருந்து உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான மூலப்பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல் குறித்து ஆராய்ந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மருந்து விநியோகத்தைச் சீர்செய்து, மருந்து உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஒவ்வொரு நகரத்தையும் உள்ளடக்கும் வகையில் அரச மருந்தக சங்கிலியின் கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மருந்து ஆராய்ச்சி நடவடிக்கைகள், மருந்து விநியோக திட்டம், ஆய்வக வசதிகள், சந்தைப்படுத்தல் மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மனித வள மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

முன்னாள் எம்.பி மற்றும் அவரது மகனும் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகனை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு...

சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மற்றும்...