follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉலகம்காரை செலுத்தி 35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

காரை செலுத்தி 35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

Published on

சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றான்.

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரான ஜுஹாயில் உள்ள விளையாட்டரங்கிற்கு வெளியே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது ஃபேன் வேய்சியோ (62 வயது) என்ற நபர் காரை வேகமாக செலுத்தி மோதியதில், குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இதற்கு சில நாட்களுக்கு கழித்து நடந்த வேறு ஒரு தாக்குதலுக்கு காரணமான மற்றொரு நபருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்தது.

ஷூ ஜியாஜின் (21 வயது) என்ற அந்த நபர் கிழக்குப் பகுதி நகரான வூக்சியில் தான் பயின்ற பல்கலைக்கழகத்தில் பார்ப்போரையெல்லாம் கத்தியால் தாக்கி, 8 பேரை கொலை செய்திருந்தார்.

தனது விவாகரத்திற்கு பிறகு தனது சொத்துகள் பங்கு போடப்பட்ட விதம் குறித்த அதிருப்தியால் ஃபேன் செயல்பட்டதாகவும், மோசமான தேர்வு முடிவுகளால் தனது பட்டப்படிப்பை முடியவில்லை என்ற கோபத்தில் ஜியாஜின் தாக்குதலை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றம் மரண தண்டனை விதித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே ஃபேனின் மரண தண்டனை திங்கட்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...