follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉலகம்காரை செலுத்தி 35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

காரை செலுத்தி 35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

Published on

சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றான்.

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரான ஜுஹாயில் உள்ள விளையாட்டரங்கிற்கு வெளியே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது ஃபேன் வேய்சியோ (62 வயது) என்ற நபர் காரை வேகமாக செலுத்தி மோதியதில், குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இதற்கு சில நாட்களுக்கு கழித்து நடந்த வேறு ஒரு தாக்குதலுக்கு காரணமான மற்றொரு நபருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்தது.

ஷூ ஜியாஜின் (21 வயது) என்ற அந்த நபர் கிழக்குப் பகுதி நகரான வூக்சியில் தான் பயின்ற பல்கலைக்கழகத்தில் பார்ப்போரையெல்லாம் கத்தியால் தாக்கி, 8 பேரை கொலை செய்திருந்தார்.

தனது விவாகரத்திற்கு பிறகு தனது சொத்துகள் பங்கு போடப்பட்ட விதம் குறித்த அதிருப்தியால் ஃபேன் செயல்பட்டதாகவும், மோசமான தேர்வு முடிவுகளால் தனது பட்டப்படிப்பை முடியவில்லை என்ற கோபத்தில் ஜியாஜின் தாக்குதலை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றம் மரண தண்டனை விதித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே ஃபேனின் மரண தண்டனை திங்கட்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1)...

ட்ரம்ப் நிர்வாகத்தின் நிதியுதவி குறைப்பு – உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட மனிதாபிமான நிதியுதவி குறைப்பு நடவடிக்கைகள், உலக நாடுகள்,...