follow the truth

follow the truth

February, 13, 2025
Homeஉலகம்மோடி - டிரம்ப் தொலைபேசி உரையாடல் - மோடிக்கு டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடல் – மோடிக்கு டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

Published on

இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலில், அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று பிரதமர்மோடிக்கு டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமையன்று, இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் முதல் உரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே உறுதியான உரையாடல் நடந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியும், டொனால்ட் டிரம்பும் விரைவில் சந்திக்கலாம் என்று பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்தும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிக பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை சமநிலைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதிக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ள நிலையில், பிரதமர் மோதியுடனான உரையாடலில் டிரம்ப் இரண்டு விஷயங்களை வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒன்று, முடிந்தவரை அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும். இரண்டாவதாக, இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம், ஒரு பக்கமாக சாய்ந்து விடாமல் சமநிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக தங்கியுள்ள​ 19 ஆயிரம் பேர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்

பிரிட்டனில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் வெளிநாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் பேரை வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை...

உக்ரைன் – ரஷ்யா, ஹமாஸ் – இஸ்ரேல் : ட்ரம்பின் இருவேறு உத்தரவுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கிடையில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தொலைபேசி உரையாடல்...

“எங்கள் நிறுவனம் விற்பனைக்கு இல்லை” – எலோன் மஸ்க்கிற்கு chatgpt உரிமையாளர் பதில்

AI தொழிநுட்ப நிறுவனங்களில் தலைசிறந்த நிறுவனமாக தற்போதைக்கு கருதப்படும் நிறுவனம்தான் OpenAI நிறுவனம். இது chatgpt நிறுவனத்தின் கீழ்...