follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP2"அரசாங்கத்தின் பழிவாங்கல் வேட்டையில் ராஜபக்ஷ" சர்வதேசத்திற்கே தெரிவித்த நாமல்

“அரசாங்கத்தின் பழிவாங்கல் வேட்டையில் ராஜபக்ஷ” சர்வதேசத்திற்கே தெரிவித்த நாமல்

Published on

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது என்றும், விரைவில் உண்மை வெல்லும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சட்டமா அதிபர் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்களில் படித்ததாகவும், 8 ஆண்டுகளுக்கு முன்பு நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் அந்தக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அரசியல் பழிவாங்கல் வேட்டையைத் தொடங்கியுள்ளது என்றும், ஆனால் நீதித்துறையின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், நீதி வெல்லும் என்று நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை புனைந்து வருவதாகவும், அதன் மூலம் நாட்டை ஆளத் தவறியதில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதாகவும் அவர் கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம்...

புற்றுநோயால் வருடாந்தம் சுமார் 250 சிறுவர்கள் உயிரிழப்பு

புற்றுநோயால் வருடாந்தம் 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர்,  நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய்...