follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்தொடர் போராட்டம் - செர்பிய பிரதமர் இராஜினாமா

தொடர் போராட்டம் – செர்பிய பிரதமர் இராஜினாமா

Published on

செர்பியாவில் ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில் பிரதமர் மிலாஸ் வுசெவிக் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

செர்பியாவில் நோவிசாட் நகரில் கடந்த நவம்பர் மாதம் ரயில் நிலைய கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானதை தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் ஊழல் நடந்துள்ளதாக கூறி போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பல வாரங்களாக ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகின்றது. பிரதமர் வுசெவிக்கின் எதேச்சதிகார ஆட்சியின் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளதை பிரதிபலிப்பதாக இந்த போராட்டம் மாறியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் வுசெவிக் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இராஜினாமா செய்வது தனது நிபந்தனையற்ற முடிவு என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் முன்கூட்டியே இராஜினாமா செய்வது பாராளுமன்ற கூட்டத்துக்கு வழிவகுக்கும். புதிய அரசை தேர்ந்தெடுக்க அல்லது உடனடி தேர்தலை நடத்துவதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்குவதற்கு பிரதமரின் இராஜினாமா பாராளுமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...