follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1பேர வாவியில் விலங்குகள் இறந்தமை தொடர்பிலான அறிக்கை இன்று வௌியாகிறது

பேர வாவியில் விலங்குகள் இறந்தமை தொடர்பிலான அறிக்கை இன்று வௌியாகிறது

Published on

பேர வாவியில் விலங்குகள் இறந்தமை தொடர்பாக எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் குறித்த இறுதி பரிசோதனை அறிக்கை இன்று (31) வெளியிடப்படும் என்று நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீரில் அம்மோனியாவின் செறிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் பிரிவின் தலைவர் கலாநிதி ஷியாமலி வீரசேகர தெரிவித்தார்.

“தண்ணீர் மாசுபட்டுள்ளது என்பதை மாத்திரமே இந்த நேரத்தில் என்னால் சொல்ல முடியும், இருப்பினும், இது தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்படும்.”

இதற்கிடையில், பேர வாவியில் இறந்த பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக நகர கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் மொஹமட் இஜாஸ் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சோதனை அறிக்கைகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...