follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1ஒக்டோபர் மாதத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் விசேட தினமொன்று அறிவிக்கப்படும்

ஒக்டோபர் மாதத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் விசேட தினமொன்று அறிவிக்கப்படும்

Published on

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய ஒரு யோசனையை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம், பௌத்தம், ஹிந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்ற வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, அனைவரினதும் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் இவை அனைத்தும் ஒன்று சேர்த்த விழாவை நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...