follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுவிபத்தில் சிக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு டிபென்டர் - 4 பேர் காயம்

விபத்தில் சிக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு டிபென்டர் – 4 பேர் காயம்

Published on

தலாவ பகுதியில் இன்று(01) அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை குறித்த பாதுகாப்பு டிபெண்டர் ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...