follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறிய ஆர்ஜென்டீனா

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறிய ஆர்ஜென்டீனா

Published on

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்காவை தொடர்ந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும்.

கொரோனா உட்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்சினைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் முடிவை ஆர்ஜென்டீனா ஜனாதிபதி ஜேவியர் மிலே எடுத்துள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் நேற்று (05) அறிவித்தார்.

“தொற்றுநோய் காலத்தில் சுகாதார முகாமைத்துவத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் இறையாண்மையில் ஒரு சர்வதேச அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 10 வரை விமான சேவை இரத்து

இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக...

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும்...