follow the truth

follow the truth

March, 27, 2025
Homeஉள்நாடுமத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Published on

நிறுத்தப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் முதல் கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் மீள ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அதற்கான கடன் தவணைக்கு சீனாவின் எக்ஸிம் வங்கியின் அனுமதியை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அதிவேக வீதியின் முதல் கட்டம் கடவத்தை தொடக்கம் மீரிகம வரையில் அமைந்துள்ளது. இதுவரை 20 வீத நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

2026ஆம் ஆண்டுக்குள் இதனை மக்களிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மத்திய அதிவேக வீதியில் பொத்துஹர முதல் கலகெதர வரையிலான பகுதி மூன்றாம் கட்டத்திற்கு உரித்தானதாகும். மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர், பொறியியலாளர் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

08 மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெங்கு நுளம்பு...

கொம்பனித் தெரு இரவு விடுதி மோதல் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி...

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள...