follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP2புற்றுநோயால் வருடாந்தம் சுமார் 250 சிறுவர்கள் உயிரிழப்பு

புற்றுநோயால் வருடாந்தம் சுமார் 250 சிறுவர்கள் உயிரிழப்பு

Published on

புற்றுநோயால் வருடாந்தம் 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர்,  நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.
இவர்களில் வருடாந்தம் சுமார் 250 சிறார்கள் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கான இயலுமை குறைவாக உள்ளதாகவும் சமூக வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.
குழந்தை பருவ புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரைவில் அதற்கான சிகிச்சைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்வதன் மூலம் அதனை இலகுவில் குணப்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...

2025ல் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

08 மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெங்கு நுளம்பு...

கொம்பனித் தெரு இரவு விடுதி மோதல் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி...