follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1வெப்பமான காலநிலை - பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

வெப்பமான காலநிலை – பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

Published on

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக இந்நாட்களில் ஏற்றவாறு பாடசாலைகளில் மாணவர்களை எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு சுசாதார அமைச்சு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இந்தப் பரிந்துரைகள் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை கல்வி அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.

வெப்பமான நாட்களில், மாணவர்கள் வெளிப்புற விளையாட்டு மைதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பாடசாலை இடைவேளையின் போது வெளியில் அதிக சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதையும், விளையாட்டு விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மதிய நேரத்தில் அதிக வெப்பநிலை நிலவும் போது, ​​அத்தியாவசியமற்ற சூழ்நிலைகளில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்த்தல் (பாடசாலையிலும் வீட்டிலும்).

அதிக தண்ணீர் குடிக்கவும், சோர்வைப் போக்கவும் இரண்டு குறுகிய ஓய்வு நேரங்களை வழங்குவது சிறந்தது.

போன்ற முக்கிய பரிந்துரைகள் கடிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...