follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2"கொலையாளியை வீரனாக்கி 'லவ் க்ரஷ்' ஆக்கிவிட்டீர்கள் - முறையான விசாரணை வேண்டும்"

“கொலையாளியை வீரனாக்கி ‘லவ் க்ரஷ்’ ஆக்கிவிட்டீர்கள் – முறையான விசாரணை வேண்டும்”

Published on

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து இன்று நாடாளுமன்றில் கேள்வி பதில் நேரத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. குற்றவாளியை 8 மணித்தியாலங்களில் கைது செய்தமை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் குற்றவாளியான பெண்ணை கைது செய்யவில்லை. இருவரும் நீர்கொழும்புக் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் பிரிந்து சென்றுள்ளனர். இதில் துப்பாக்கி சூடு நடத்தியவரை தான் நீங்கள் கைது செய்தீர்கள்.. ஆனால் ஊடகங்களில் நேற்று இரவு செய்திகளில் தெரிவித்திருந்ததன்படி. துபாயில் இருந்து துப்பாக்கிசூடு நடத்தியவரை காட்டிக்கொடுத்ததால் தான் அவரை கைது செய்ததாகவும் நமது திறமையால் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊடகங்களில் அப்படித்தான் கதை இருந்தது.. ஏனெனில் இன்னும் மீதமுள்ள குற்றவாளிப் பெண்ணை கைது செய்ய முடியவில்லையே?

அடுத்தது தான், என்னதான் செய்தாலும், சந்தேக நபரை நாட்டுக்கு வீரராக புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கி பிரசித்தம் அடைய செய்தீர்கள்.. அப்படி புகைப்படங்களை வெளியிடாதீர்கள் அமைச்சரே இது குறித்து சிந்தியுங்கள். பாருங்களேன், கைது செய்தவுடனேயே கைகளை பிடித்துக் கொண்டு லவ் பண்ணுறது போல போஸ் குடுத்திட்டு இருக்கிறான்.. இது பிழை, யார் செய்த வேலை இது? இப்படிப்பட்ட குய்ற்றச்செயல்கள் புரிந்துள்ள கொலையாளியை லவ் பண்ணுறது போன்று தானே வேனில் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களில் இருக்கிறார்.. என்னமோ பெரிய வீரதீர செயலை செய்தவர் போல.. அது குறித்து விசாரணை வேண்டும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...

வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு வெளிநாடுகளில்...