follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅறுவை சிகிச்சையின்போது பாவிக்கப்படும் துணி உற்பத்தியை அதிகரிப்பதில் அவதானம்

அறுவை சிகிச்சையின்போது பாவிக்கப்படும் துணி உற்பத்தியை அதிகரிப்பதில் அவதானம்

Published on

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, உள்ளூர் அறுவை சிகிச்சையின்போது பாவிக்கப்படும் துணி உற்பத்தி சரியான முறையிலும், தரநிலைகளின்படியும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குவதன் மூலமும், தொழில்துறையினரை ஊக்குவிப்பதன் மூலமும், நாட்டின் சுகாதார அமைப்பு தொடர்ந்து அறுவை சிகிச்சை துணியைப் பெறுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார்.

அதன்படி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மருத்துவ விநியோகப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் நாட்டில் அறுவை சிகிச்சை துணி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட 300 பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் சமீபத்தில் சுகாதார அமைச்சில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

நாட்டில் அறுவை சிகிச்சை துணி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட 300 உற்பத்தியாளர்களில் 90 சதவீதம் பேர் உள்நாட்டிலேயே இந்தத் தொழிலை புரிவதால், உயர் தரத்தின் கீழ் மருத்துவ விநியோகத் துறைக்கு இந்த தயாரிப்புகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துமாறு உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.

1972 ஆம் ஆண்டு உள்ளூர் கிராமப்புறத் தொழிலாக அறுவை சிகிச்சை துணி உற்பத்தியுடன் தொடங்கி, 53 ஆண்டுகளாக மருத்துவ விநியோகத் துறைக்கு அறுவை சிகிச்சை துணியை தொடர்ந்து வழங்கியதற்காக உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்களுக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறுவதன் மூலம் அவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணித்தார்.

உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்கள், அறுவை சிகிச்சை துணி வாங்குவதில் பின்பற்றப்படும் தரநிலைகள் மற்றும் கொள்முதல் செயல்முறை களில் காணப்படும் சிக்கல்களில் மற்றும் பிரச்சினைகள் குறித்து அமைச்சரின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த பின்னர் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பான கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.

மேலும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...