follow the truth

follow the truth

March, 22, 2025
Homeஉள்நாடுமனித - யானை மோதலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை

மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை

Published on

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் குறைக்கும் நோக்கில் கடந்த இரண்டு வாரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள், தற்போதுள்ள யானை வேலிகள், வனப் பகுதிகள் மற்றும் கண்காணிப்புச் சாவடிகள் கட்டுதல் மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடமாக்கல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

இந்தப் பணிகள் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்ட செயலகங்களிலும், அனுராதபுரம் வனவிலங்கு அலுவலகத்திலும் களத்தில் உள்ள இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த டிஜிட்டல் வரைபடமாக்கல் வில்பத்து பகுதியில் இருந்தே தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிஜிட்டல் வரைபடமாக்கல் மூலம் மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எதிர்காலத்தில் வெற்றிகரமான சோதனைகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

இது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று வடமத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் விஜய வனசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை சீருடைகளை விநியோகிக்கும் பணி நிறைவு

இந்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சீன அரசிடமிருந்து நன்கொடையாக...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மற்றுமொரு சந்தேகநபர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்த...

மாத்தறை துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்றிரவு (21)...