follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1எரிவாயு சிலிண்டர்களுக்கு பணம் செலுத்த நடவடிக்கை?

எரிவாயு சிலிண்டர்களுக்கு பணம் செலுத்த நடவடிக்கை?

Published on

நுகர்வோர் கைவசமிருக்கும் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்று, அவற்றுக்கான பணத்தை மீள செலுத்துவது குறித்து நுகர்வோர் விவகார பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

எனினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இதுவரை எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர்.

புதிதாக விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சம் முழுமையாக இன்னும் நீங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எரிவாயு கலவையில் உள்ள குளறுபடியே எரிவாயு வெடிப்புக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதனை சரிசெய்வதற்கு லிட்ரோ எரிவாயு விநியோக நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எரிவாயு தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ளதால், கொழும்பில் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், பேக்கரிகள், மூடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

மாதுறு ஓயா விபத்தில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்தார் இராணுவத் தளபதி

மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது...