follow the truth

follow the truth

March, 27, 2025
Homeஉள்நாடுடயானா கமகேவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு மே மாதம் விசாரணைக்கு

டயானா கமகேவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு மே மாதம் விசாரணைக்கு

Published on

போலி ஆவணத்தைச் சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டைப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணை மே 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரச தரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி வரை பாணந்துறை மற்றும் கொழும்பு பகுதிகளில் போலியான தேசிய அடையாள அட்டையைக் காட்டி இலங்கை கடவுச்சீட்டை மோசடியாகப் பெற்றதாக டயானா கமகே மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...

2025ல் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

08 மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெங்கு நுளம்பு...

கொம்பனித் தெரு இரவு விடுதி மோதல் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி...