follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை - மீறினால் அபராதம்

ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை – மீறினால் அபராதம்

Published on

இந்தியா ஐபிஎல் தொடர், எதிர்வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில், வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்கு செல்லும்போது கூட வீரர்கள் தங்களது அணியின் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் தான் பயணம் செய்ய வேண்டும் என்றும் தனியாக பிரத்யேகமாக வாகனங்களை கொண்டு வந்து அதில் பயணிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

அதோடு பயிற்சி நாட்களில் கூட வீரர்களின் உறவினர்கள் வீரர்களின் ஓய்வறைக்கு வரக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் மைதானத்தில் வீரர்கள் பிராக்டீஸிற்கு வரும்போது உரிய அங்கீகார அட்டை கொண்டு வர வேண்டும். அப்படி எடுத்து வர மறுத்தால் கூட அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று முடிந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் யாரும் ஸ்லீவ்லெஸ் ஜெர்சியை அணிந்து வரக்கூடாது அப்படி இந்த விதிமுறையை மீறியும் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்சியை அணிந்து வந்தால் முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அதன் பிறகு கண்டிப்புடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...