follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP2பூந்தொட்டியை மிதித்ததற்காக ஹரிணி மீது வழக்கு

பூந்தொட்டியை மிதித்ததற்காக ஹரிணி மீது வழக்கு

Published on

பூந்தொட்டியை மிதித்ததற்காக தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பொல்துவ சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூர்ந்தபோது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி எனக்கு நினைவிருக்கிறது. அன்று பொல்துவவில் நடந்த போராட்டத்தின் போது இங்குள்ள பெண் எம்.பி.க்கள் உட்பட எங்கள் பெண் எம்.பி.க்கள் நீர்த்தாரைகளால் தாக்கப்பட்டனர்.

தண்ணீர் தாக்குதலுக்கு ஆளான பிறகு அன்று நான் பாராளுமன்றத்திற்கு வந்தேன். பூந்தொட்டிகளை மிதித்ததற்காக எங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்படுகிறது. நான் பிரதமராக இருந்தபோது கூட, அதற்கு நான் பொறுப்புக் கூற வேண்டியிருந்தது. அந்தப் போராட்டங்கள் வழியாகத்தான் நாங்கள் இங்கு வந்தோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த நடிகர் மோஹன்லால்

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (19)...

பெண்கள் ‘டி-20’ உலக கிண்ணம் : அட்டவணை வெளியீடு

பெண்களுக்கான 'டி-20' உலக கிண்ண அட்டவணை வெளியானது. பைனல் (2026, ஜூலை 5), லார்ட்சில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...

கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் நடந்த போரில் 140 பேர் பலி

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் பெரும்பாலோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா பகுதியில்...