எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,296,330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற
கலந்துரையாடலில் மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள், துணை மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,872 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தல் நடாத்தப்படவுள்ளது.