follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇந்தியாவிடமிருந்து 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

இந்தியாவிடமிருந்து 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

Published on

நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000 ஃபுரோஸ்மைடு ஊசிகள் (20மிகி/2மிலி) இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா வினால் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலின் டி ஜயதிஸ்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியா மற்றும் இலங்கை இடையே காணப்படும் நீண்டகால நட்பை நினைவுபடுத்தும் விதமாக இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இடையே இடெம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்நன்கொடை வழங்கப்பட்டது.

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சினுள் எதிர்காலத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது, மேலும் தற்போது நடைபெற்று வரும் பல திட்டங்கள் மற்றும் திட்டங்களின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த தகவல்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

எதிர்வரும் காலத்தில் நாடு முழுவதையும் உள்ளடக்கிய ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவுவதன் மூலம் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு இந்திய உயர் ஸ்தானிகர் விசேட பாராட்டுகளைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...