follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉள்நாடுஅமெரிக்க LDS அறக்கட்டளைகளின் எதிர்கால நன்கொடை நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

அமெரிக்க LDS அறக்கட்டளைகளின் எதிர்கால நன்கொடை நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

Published on

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும், அமெரிக்காவில் உள்ள இயேசு கிறிஸ்துவின் திருச்சபையின் (LDS -Latter-day Saint Charities) அறக்கட்டளைகளின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சிறப்பு சந்திப்பு இன்று (24) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள LDS அறக்கட்டளைகளின் எதிர்கால நன்கொடை நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும் நாட்டில் தொண்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் சக்கர நாற்காலி இயக்கம் ஆதரவு திட்டம் மற்றும் புற்றுநோய் மருந்து திட்டத்தை ஒரு வருட காலத்திற்கு தொடர அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

புற்றுநோய் மருந்து திட்டத்தின் கீழ், அபிராடெரோன் 250 மிகி 300,000, லெட்ராசோல் 2.5 மிகி 150,000, அனாஸ்ட்ரசோல் 1 மிகி 2,100,000, கேப்சிடபைன் 500 மிகி 1,056,000, சிஸ்ப்ளேட்டின் 50 மிகி இன்ஜ் 6000 ஆகியவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

570 சிறப்பு சக்கர நாற்காலிகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட நடமாடும் உதவிகளை நன்கொடையாக வழங்குவதன் மூலம் நாட்டில் தங்கள் நன்கொடை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் (NMRA) பதிவுசெய்யப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள புற்றுநோய் மருந்துகளை ஒரு வருடத்திற்கு நன்கொடையாக வழங்க முடித்துள்ளதாகவும் பிரதிநிதிகள் சுகாதார அமைச்சரிடம் தெரிவித்தனர்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்காவில் உள்ள இயேசு கிறிஸ்துவின் திருச்சபையின் மனிதாபிமானப் பிரிவான புனிதர் L D S அறக்கட்டளைகள், கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு மத்திய மாகாணம் உட்பட பல பகுதிகளுக்கு சேவைகளை வழங்குவதற்காக ஒரு ஆய்வகத்தை நன்கொடையாக வழங்குவது குறித்து பரிசீலிக்கும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ,… தற்போதைய அரசாங்கம் நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு திட்டமிட்ட தீர்வுகளை வழங்கி சேவைகளை நிர்வகித்து வருவதால், சக்கர நாற்காலி இயக்க உதவித் திட்டம் மற்றும் புற்றுநோய் மருந்துத் திட்டம் ஆகியவை நாட்டில் சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

நாட்டின் சுகாதார சேவையையும், அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களையும் வலுப்படுத்த எந்தவொரு துறையிலிருந்தும் ஆதரவை வழங்க முடியும் என்றும், சுமார் 6 ஆண்டுகளாக நாட்டின் சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக உழைத்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...