follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

Published on

பத்து அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேற்று நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று (26) நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் துருவ் ஜோரேல் அதிகபட்சமாக 33 ஓட்டங்களை சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் வைபவ், ஹர்ஷித் ரானா, மோயின் அலி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 152 எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக், மோயின் அலி களமிறங்கினர். மோயின் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கெப்டன் ரஹானே 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து, அங்க்ரிஷ் ரகுவஞ்சியுடன் ஜோடி சேர்ந்த டிகாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் கொல்கத்தா 17.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய குவிண்டன் டிகாக் 61 பந்துகளில் 97 ஓட்டங்களுடன் 17 பந்துகளில் 22 ஓட்டங்களை விளாசிய அங்க்ரிஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த வெற்றி மூலம் தரவரிசையில் கொல்கத்தா 6வது இடத்தில் உள்ளது. தோல்வி மூலம் தரவரிசையில் ராஜஸ்தான் 10வது இடத்தில் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...