follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுதென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை

தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை

Published on

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தென்னை உற்பத்திச் சகையினால் நடைமுறைப்படுத்தப்படும் கப்ருகட சவியக் – வெடி பலதாவக் ( தென்னைக்கு பலம் – அதிக விளைச்சல்) திட்டத்தின் கீழ் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் நிகழ்வு நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்யா அரசாங்கம், யூரல் கலி நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஆகியன ஒன்றிணைந்து இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

ரஷ்யாவின் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற 27,500 மெற்றிக் தொன் எம் ஓ பி உரம் மற்றும் ஏப்பாவெல ரொக் பொஸ்பேட் , யூரியா கலந்த தென்னை உற்பத்திக்கான விசேட ஏஎம்பி தென்னை உரம் 56,700 மெற்றிக் தொன்னை தயாரிக்கும் அரச உரக் கம்பனி தற்போது இதற்காக செயற்பட்டு வருகிறது.

இந்த உரத்தை மானிய விலையில் வழங்குதல் மற்றும் விநியோகித்தல் என்பவற்றுக்காக அவசியமான நடவடிக்கைகளை தென்னை உற்பத்திச் சபை மற்றும் அரச உரக் கம்பனி ஆகியன மேற்கொண்டு வருகின்றன.

சந்தையில் 9000 ரூபாய்க்கு காணப்படும் 50 கிலோ உரப் பொதி ஒன்றை 4,000 ரூபாய் மானிய விலையில் வழங்கும் செயற்பாடு இதற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

அதன்படி இம்மாதம் 30ஆம் திகதி வெள்ளவாய பிரதேச செயலாளர் பிரிவில் தென்னை உற்பத்திச் சபையின் ஹந்தபானகல தென்னை நாற்று மேடையில் இடம் பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...