follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஜே.வி.பியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் சிறையில் தான் இருக்க வேண்டும் - சஞ்சீவ

ஜே.வி.பியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் சிறையில் தான் இருக்க வேண்டும் – சஞ்சீவ

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச தலைவர் என்ற பதவிக்கான கடமைகளில் இருந்து விலகி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பதவிக்கான பொறுப்பினை தேர்தல் பிரச்சாரங்கள் ஊடாக நிறைவேற்றி வருவதாகவும் இதுவா சிறந்த அரசியல் கலாச்சாரம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்ட மேடைகளில் உரையாற்றுகிறார். அரச தலைவர் பதவிக்கான பொறுப்புகளில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பதவிக்கான பொறுப்பினை நிறைவேற்றுகிறார்.

இது எந்தளவுக்கு முறையானது. இதுவே தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசியல் கலாச்சாரம்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர்கள் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று ஆளும் தரப்பு குறிப்பிடுவது முறையற்றது.

விமர்சிப்பவர்கள் சிறை செல்ல வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் சிறையில் தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் இவர்கள் கடந்த காலங்களில் அரசாங்கங்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீதிக்கு இறங்கி போராடினார்கள்.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. நாட்டுக்காக மேற்கொள்ளும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...