follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு?

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு?

Published on

இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதி நிதி அமைச்சர் பதவியிலும் மாற்றம் செய்யப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது சமூக ஊடக கணக்கில் காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பதிலாக பிமல் ரத்நாயக்க பிரதமராக நியமிக்கப்படலாம்.

மேலும், பிரதி நிதி அமைச்சர் பதவிக்கு ஒரு தொழிலதிபர் நியமிக்கப்படலாம் என்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருண ராஜபக்ச, கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) மேல் மாகாண சபை குழுத் தலைவராக கடயைமாற்றியுள்ளார் என்பதுடன் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

இதேவேளை, இந்த தகவல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...