follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"என்னை சிறையில் அடையுங்கள், ஆனால் என் மனைவியைத் தொட்டால் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியும்"...

“என்னை சிறையில் அடையுங்கள், ஆனால் என் மனைவியைத் தொட்டால் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியும்” – லொஹான்

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விரும்பினால் தன்னை மீண்டும் சிறையில் அடைக்க முடியும் என்றும், பத்து முறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், தனது மனைவி சிறையில் அடைக்கப்பட்டால் என்ன செய்வது என்று தனக்குத் தெரியும் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கூறுகிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுன மேடைக்கு தாம் புதியவரல்ல என்றும், மிகவும் கடினமான காலங்களிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...