follow the truth

follow the truth

July, 2, 2025
Homeலைஃப்ஸ்டைல்குழந்தைகளை தாக்கும் 'தக்காளி காய்ச்சல்'

குழந்தைகளை தாக்கும் ‘தக்காளி காய்ச்சல்’

Published on

கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் ‘தக்காளி காய்ச்சல்’ பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, கோடை காலங்களில் இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

உடலில் சிவப்பு நிறத்தில் தக்காளி போல் சிறிய கொப்புளங்கள் தோன்றுவதால் இந்த பாதிப்பை தக்காளி காய்ச்சல் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர்.

இது தொடர்பாக குழந்தைகள் நல வைத்தியர் ஒருவர் கூறுகையில்;

“.. கை, கால் மற்றும் வாய் நோயால், குழந்தைகளுக்கு தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல், அதிக காய்ச்சல் மற்றும் சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாகவே சரி ஆகிவிடும்.

மேலும், இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கை, கால் மற்றும் வாய் நோய் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது.

பாடசாலைகளுக்கு செல்லும் குழந்தைகள், நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும் அவர்கள் கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்த காய்ச்சலை தவிர்க்க முடியும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைகளை சுருக்கமின்றி பராமரிக்க எளிய வழிகள்

பராமரிப்பு என்பது முகத்துக்கு மட்டுமானது அல்ல. உடல் முழுக்க சருமத்துக்குப் பராமரிப்புத் தருவது முக்கியம். குறிப்பாக, வெயிலால் அதிகம்...

ஆட்டுக்கால் சூப் – அதில் அப்படி என்ன இருக்கிறது?

எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள். காய்ச்சல், சளி...

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு...