follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1"ஸ்ரீ தலதா வழிபாடு" - சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

Published on

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட இந்த அழைப்பிதழில், “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்பதற்காக கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறி தலதா வழிபாடு” நிகழ்வுக்காக இவ்வாறான எந்தவொரு சிறப்பு அழைப்பிதழும் எவருக்கும் வழங்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேலும், இந்த போலி அழைப்பிதழை அடிப்படையாகக் கொண்டு, சிறி தலதா வழிபாட்டிற்காக சிறப்பு (VIP) வரிசை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவி வருவதாகவும், அவற்றில் எந்தவொரு உண்மைத்தன்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...