follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுபஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு

Published on

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படும் விதம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

இதன்போது, பெரும்பாலும் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 2 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, 14 ரூபாவாக காணப்படும் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 2 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

அதற்கமைய, ஏனைய பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு பஸ் சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்திருந்த யோசனைகள் ஊடாக கோரியிருந்தன.

எவ்வாறாயினும், 7.5 முதல் 10 சதவீத்திற்கு உட்பட்ட பஸ் கட்டண அதிகரிப்பை வழங்கவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...