follow the truth

follow the truth

August, 17, 2025
HomeTOP2ரூ.98 மில்லியன் மிச்சப்படுத்திய NPP அரசின் SMS செய்தி - அப்பட்டமான பொய் அது இலவச...

ரூ.98 மில்லியன் மிச்சப்படுத்திய NPP அரசின் SMS செய்தி – அப்பட்டமான பொய் அது இலவச சேவை

Published on

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றிய தினுக் கொழும்பகே, முந்தைய ஜனாதிபதிகள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை இலவசமாக அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

“இது தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் இலவசமாக வழங்கப்படும் சேவையாகும்,” என அவர் தனது X கணக்கில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும், இலங்கை ஜனாதிபதியின் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி வெளிப்படுத்தியதை அடுத்து, அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இணைப்புச் செய்தி
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து SMS அனுப்பாததால் நாட்டுக்கு 9.8 மில்லியன் ரூபாய் மிச்சமானது..- நிலந்தி

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...