எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு அமைய உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.