பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்திய- பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் மூன்று குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.