follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் - ரஷ்ய ஜனாதிபதி

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

Published on

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி அவரை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க பட்டியலிடப்பட்ட பெயர்களில் ரஷ்ய ஜனாதிபதி புதின் இல்லை என்று கிரெம்ளின் அறிவித்தது.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கலந்து கொள்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது கத்தாரில் இருக்கும் அவர், ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை என்றால், தானும் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகள் டிசம்பர் 2019 முதல் நேரில் சந்தித்ததில்லை.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடைசி நேரடிப் பேச்சுவார்த்தை மார்ச் 2022 இல் இஸ்தான்புல்லில் நடைபெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த...