இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள போட்டியில் Royal Challengers Bengaluru மற்றும் Kolkata Knight Riders அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நாளை (17) முதல் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடைபெற இருக்கும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கான போட்டிகளில் விளையாட இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.