follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் - இருவர் பலி

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

Published on

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர்.

நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில், நேற்றிரவு மெக்சிகோ நாட்டு கடற்படைக் கப்பல் விபத்தில் சிக்கியது.

சனிக்கிழமை மாலை மோதலுக்கு முன்பு அந்த படகில் மின்தடை ஏற்பட்டதாக நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். நல்லெண்ணப் பயணமாக வருகை தந்த அந்த கப்பலில் 277 பேர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குவாஹ்டெமோக் என்ற கப்பல், பாலத்தின் அடியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டுள்ளது. இணையத்தில், பரவி வரும் வீடியோவில் கப்பல் பாலத்தின் அடியில் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்த, புரூக்ளின் பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...